1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களால் தொல்லையா? - இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!

கல்லூரி மாணவர்களால் தொல்லையா? - இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!


சென்னை மாநிலக் கல்லூரியில், ரயில்வே இருப்புப்பாதை காவல் துறை சார்பில் மாணவர்கள் ரயில் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.


மாணவர்கள் அதிகளவில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக இருக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் படியில் நின்றுகொண்டும், தொங்கிக் கொண்டும் பயணம் செய்யக்கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு மாணவர்கள் ரயிலில் தகராறில் ஈடுபட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமான கைது நடவடிக்கைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு, மூன்று வருடங்களாக பதிவு செய்யப்பட்ட ரயில் விபத்து மரணங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க, ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையின் 24X7 உதவி மைய எண் 1512 மற்றும் 9962500500 என்ற எண்கள் எல்லா ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால், பயணிகள் இந்த எண்களில் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை இருப்புப்பாதை காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like