மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! 'டாஸ்மாக்' கடைகளில் புதிய பீர் அறிமுகம்..!

டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் குடிகாரர்கள் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு ஒயின், பீர் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிக அளவில் கடைகளுக்கு பீர் வரத்து இருக்கிறது. கடந்த காலங்களில் தினமும் 60,000 பெட்டிகள் வரை தான் பீர் விற்கப்படும். ஆனால் தற்போது ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டி விற்பனையாவதால் தட்டுப்பாடு இன்றி பீர் பெட்டிகளை சப்ளை செய்ய வேண்டும் என மதுபான நிறுவனங்களுக்கு டாஸ்மாக் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய புதிய வகை பீர்களை குடிகாரர்கள் விரும்புவதால் டாஸ்மாக்கில் தற்போது விற்கப்படும் 35 வகை உயிர்களோடு மேலும் புதிய 6 பீர் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக தெலுங்கானா, கர்நாடகாவில் அதிகமாக விற்பனையாகும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பீரின் விற்பனை அதிக அளவில் இருக்கும் நிலையில் கர்நாடகாவில் தயாரிக்கப்படும் பிளாக் போர்ட், வுட்பெக்கர் லார்ஜர் ஆகிய பீர் ரகங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஃபிளையிங் மங்கி லெஜர், ஹண்டர் சூப்பர் ஸ்ட்ராங் ஆகிய இரு வகைகளும் டாஸ்மாக் மது கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 330 மில்லி டின், 650 மில்லி பாட்டில் ஆகியவற்றில் இந்த பீர் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்