மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! முதல்வர் சொன்ன குட் நியூஸ்..!

பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு பெண்கள் வேறுயாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆரம்பத்தில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானார் வந்தனர். முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அவர்களது மனு மறு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு கட்டங்களாக அவர்கள் இணைக்கப்பட்டனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் அவர்களில் பாதி பேருக்கு கூட உரிமைத் தொகை கிடைக்காத நிலையில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விடுபட்டவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்" என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் 9000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து மக்கள் பயனடையலாம்" என தெரிவித்துள்ளார்.