1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு முதல் திறப்பு!

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு முதல் திறப்பு!


கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு சந்தை, சுமார் ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு திறக்கப்படுகிறது. காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்களின் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமி நாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதால் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை மூடப்பட்டது. கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் கடந்த 18 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like