1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிறப்பு FD திட்டம் மீண்டும் தொடக்கம்!

1

அம்ரித் விருஷ்டி திட்டம் என்பது 444 நாட்களுக்கு முதலீடு செய்யக்கூடிய ஒரு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டமாகும். 2025 மார்ச் 31ஆம் தேதியன்று மூடப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அம்ரித் விருஷ்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் 20 அடிப்படைப் புள்ளிகளை அவ்வங்கி குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் இந்த சிறப்பு 444 நாட்கள் நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 7.05 சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் பெறலாம். இதற்கு முன்பு இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக இருந்தது. அமிர்த விருஷ்டி நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீத வட்டியும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியும் கிடைக்கும்.
 

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதி வசதியை வழங்குகிறது. இதில் அவர்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ரூ. 5 லட்சம் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டகளில் முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு 0.50 சதவீத அபராதம் பொருந்தும். ரூ. 5 லட்சத்திற்கு மேல் ரூ. 3 கோடிக்குக் குறைவான நிதிகளில் முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு 1 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like