1. Home
  2. தமிழ்நாடு

ஹேப்பி நியூஸ்! பொங்கல் பரிசுத் தொகை உறுதி!!

ஹேப்பி நியூஸ்! பொங்கல் பரிசுத் தொகை உறுதி!!


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.

வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு..ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

ஹேப்பி நியூஸ்! பொங்கல் பரிசுத் தொகை உறுதி!!

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது, முன்னேற்பாடுகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை அமைத்து அதற்கென பிரத்யேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹேப்பி நியூஸ்! பொங்கல் பரிசுத் தொகை உறுதி!!

இதன் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. எவ்வளவு ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like