தறிகெட்டு ஓடிய ஆட்டோ! மடக்கிப் பிடித்த போலீசார்! ஹான்ஸ் கடத்தியதால் 3 பேர் கைது!
![தறிகெட்டு ஓடிய ஆட்டோ! மடக்கிப் பிடித்த போலீசார்! ஹான்ஸ் கடத்தியதால் 3 பேர் கைது!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/d5333ddca305441552ca6d700e7027c8.webp?width=836&height=470&resizemode=4)
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோவில் ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னை மாநகரில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், H-5 புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோவில் சிலர் ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்துவதாக காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் கிராஸ் ரோடு சந்திப்பில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, TN 05 L 5225 என்ற எண் கொண்ட ஆட்டோவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை சிவலர் கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (34) அண்ணாமலை, (52) நடராஜன் (65) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 15,750 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையைும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.