அரையாண்டு தேர்வு... விடுமுறை... மாறுபட்ட அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்..!

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.20) விடுமுறை அளித்து ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தென்காசியில் நாளை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். அதிகாரிகளின் இந்த முரண்பட்ட அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மேலும் நாளை திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது