1. Home
  2. தமிழ்நாடு

வேதனையின் உச்சத்தில் ஜி.வி.பிரகாஷ்...! தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல..!

1

ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி விவாகரத்து தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில், தங்களது முடிவு குறித்து ஜி.வி.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like