1. Home
  2. தமிழ்நாடு

காதல் டூ கல்யாணம் டூ விவாகரத்து : ஜி.வி பிரகாஷ் - சைந்தவி 11 ஆண்டு கால மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது!

1

இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்தவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.


ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும், பாடகி சைந்தவிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பள்ளியில் துவங்கிய காதல் திருமணத்தில் முடிந்து அவர்களின் வாழ்க்கை நிறைவாக சென்று கொண்டிருக்கிறது. 
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷுக்கும், சைந்தவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. மேலும் திருமண நாளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரை வாழ்த்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடவில்லை சைந்தவி. பிரச்சனை இருப்பதால் தான் போஸ்ட் போடவில்லையோ என ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள் .

சந்தோஷமாக இருக்கும் ஒரு ஜோடி விவாகரத்து பெறுகிறது என சொல்வது ரொம்ப தப்பு. அவர்களை பற்றி விவாகரத்து வதந்தியை இப்படி அடிக்கடி கிளப்பிவிடும் நபரை முதலில் கண்டுபிடிக்கணும் என்றெல்லாம் கூறிவந்த ரசிகர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி வெளியானது.

11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், "ஆழ்ந்து யோசித்த பின்னர், நானும் சைந்தவியும் எங்களின் 11 ஆண்டுக்கால திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். இருவரின் மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர மரியாதையை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் எங்களின் இந்தத் தனிப்பட்ட முடிவை மதித்து, புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இருவரும் பிரிவதைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவே சிறந்தது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களின் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு அவசியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

சைந்தவியும் இதைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like