1. Home
  2. தமிழ்நாடு

இன்று குரு பெயர்ச்சி : பரிகாரம் செய்ய நீங்க செல்ல வேண்டிய கோவில் இதோ..!

1

ரிஷப ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்வார்.

2024ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரைக்கும் அஸ்தங்க நிலையில் பயணம் செய்வார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்வார் குரு பகவான்.

குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா ? 

குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோயில் சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோயில் ஆகும். அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலான இந்த கோயில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்.தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை  - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும்.குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்

மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். இந்த கோயில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது.இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோயில் உள்ளது.அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

Trending News

Latest News

You May Like