1. Home
  2. தமிழ்நாடு

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.. குஜராத்தைச் சேர்ந்த சிறுவன் அதிரடி கைது !

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.. குஜராத்தைச் சேர்ந்த சிறுவன் அதிரடி கைது !


ஐ.பி.எல் கிரிக்கெட் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது.

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.. குஜராத்தைச் சேர்ந்த சிறுவன் அதிரடி கைது !

ஆனால் அதன்பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றிபெரும் நிலையில் இருந்தும் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேப்டன் தோனியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர், தோனி, தோனியின் மனைவி சாக்ஷி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிரட்டல் விடுத்தனர். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடாவிட்டால் தோனியின் மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிடப்பட்டது.

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.. குஜராத்தைச் சேர்ந்த சிறுவன் அதிரடி கைது !

இதனால் நாடு முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தோனியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து ராஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைத்து வந்தனர்.

தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் வசித்து வரும் 16 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

16 வயது சிறுவன் தான் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது உறுதியாகியுள்ளதாகவும், விரைவில் ராஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அகமதாபாத் போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like