1. Home
  2. தமிழ்நாடு

டெல்லியில் வரும் 22-ம் தேதி ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம்..!

1

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017-ல் ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். கடைசியாக 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7- ம் தேதி  நடைபெற்றது.

அதன்பிறகு, லோக்சபா தேர்தலுக்கு பிறகே அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும், நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். 

இந்த நிலையில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like