ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f0a541f56ad6ca282ede61b66033f84f.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதில் ஒரு பகுதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதாவது வரும் காலங்களில் கோடை காலம் என்பதால் அனைத்து பொருட்களையும் ஒரே நாளில் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு 4 நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நிலையில் ரேஷன் பொருட்களை குறிப்பாக ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தற்போது புதிய புகார் எண்களை அறிவித்துள்ளது. அதாவது 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அது மட்டுமல்லாமல் ஒரே தவணையில் உணவு வழங்க பலமுறை அறிவுறுத்தியும் அதனை பின்பற்றாத ஊழியர்கள் மீதும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.