1. Home
  2. தமிழ்நாடு

GOVT SCHEME : நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம்!

1

கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க ஒவ்வொரு வீட்டிலும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது வழக்கம். ஆனால், தற்போது அதுவே சிறந்த முதலீட்டுக்கான தொழிலாகவும் மாறிவிட்டது. இந்த தொழில் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால், நகரவாசிகளும் தங்களுடைய முழுநேரத் தொழிலை விட்டுவிட்டு, கோழிப்பண்ணை அமைக்கத் துவங்கிவிட்டனர்.

ஆனால், கோழிப்பண்ணை வைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நிறைய செலவு செய்ய வேண்டும். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தங்களுடைய சொந்த செலவில் பண்ணை அமைத்து விடுவார்கள். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அது சவாலான விஷயம் தான்.

அவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ஒரு மகத்தான திட்டம் தான் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்.

இத்திட்டம் மூலம் நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு, 250 கோழிகள் கொண்ட சிறிய அளவிலான நாட்டுக் கோழிப்பண்ணை அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

அரசின் இலவச கோழி பண்ணை திட்டத்தின் நோக்கம்
கிராமப்புற மக்களுக்கு தேவையான வருமானம் ஈட்ட சுயதொழில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இந்த இலவச கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அந்த சுயதொழிலும் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும்.

அரசின் இலவச கோழி பண்ணை திட்டத்தின் நன்மைகள்
நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழிகளை வளர்ப்பதற்கு தேவையான கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என ஒரு பண்ணை அமைப்பதற்கு உண்டான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பு தொகையை பயனாளிகள் வங்கி கடன் மூலமாகவோ அல்லது சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவோ திரட்டி கொள்ளலாம்.

மேலும், இத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் மாவட்ட கால்நடைப் பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். எனவே, இதன் மூலம் கோழிப்பண்ணை சொந்தமாக அமைத்து முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் மூலம் கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்து, அதை வளர்த்து விற்பனை செய்துக் கொள்ளலாம்.

நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தின் தகுதிகள்
இந்த திட்டத்தின் மூலம் கோழிக் கொட்டகை அமைக்க உங்களிடம் குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். அந்த இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். கோழிக் கொட்டகை அமைக்கும் இடம் மனித குடியிருப்புகளில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அதில் மின் இணைப்பு இருக்க வேண்டும். மேலும் அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை.

அரசின் இலவச கோழி பண்ணை மானியம் பெற தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல்
  • பண்ணை அமைக்கவிருக்கும் இடத்தின் சிட்டா
  • அடங்கல் நகல்
  • 3 ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உத்தரவாத கடிதம்
  • 50% நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்)
  • இதுவரை நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்று


கோழி பண்ணை மானியத்திற்கு அப்ளை செய்வது எப்படி?
இலவசமாக கோழி பண்ணை அமைக்க கிராமத்துக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு சென்று அப்ளை செய்யலாம். அல்லது அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் டிஆர்டிஓ டிபார்ட்மெண்ட்டுக்கும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

அங்கே வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, அதை பிழை இல்லமல் பூர்த்தி செய்து கொள்ளவும். பின்னர், அந்த விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்கவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும் அட்டாச் செய்து சமர்ப்பிக்கவும்.

Trending News

Latest News

You May Like