1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு..!

1

நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் மஞ்சளாறு  அணையிலிருந்து 15.10.2023 முதல் 153 நாட்களுக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.    இதன்மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like