அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : எடப்பாடி பழனிசாமி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ff8a767171cebd2dc80364bebe4ec8de.jpg?width=836&height=470&resizemode=4)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழகத்தை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு அரசே காரணியாக உள்ளது.
சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது போதைப் பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 17, 2024
விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு…