1. Home
  2. தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை..! வரும் 9 -ம் தேதி பணிக்கு வராவிட்டால்...

1

ஜனவரி 9-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா்.

இந்தப் போராட்ட அறிவிப்பால் ஜனவரி 9-ம் தேதிமுதல் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்படும் சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோா் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவாா்கள்.

அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்சினைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என்று அரசுத் தரப்பு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனவரி 9-ம் தேதி பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையாணை விதிகளின்படி சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.மேலும் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like