ஆளுநர் இல.கணேசன் மறைவு: 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு..!
இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நாகாலாந்து மாநில கவர்னராக இருந்து வந்தவர் இல.கணேசன்.இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 80. இந்நிலையில் நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் 7 நாட்கள் அரசு முறை துக்கம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படப்பட்டுள்ளது. மாநில அரசுத் துறைகளால் எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது.