2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்..!

மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் அவை சட்டங்களாகி உள்ளன.