காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெற அரசு திட்டம்..?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/bdbbc309748979ccbe7adc0ebc0587d8.webp?width=836&height=470&resizemode=4)
முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அதாவது, விற்பனை செய்யும்போது, பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்யவும், காலி பாட்டிலை திரும்பப் பெற்றதும், அந்த 10 ரூபாயை வாடிக்கையாளரிடம் மீண்டும் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.