அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் !! ஏன் தெரியுமா ?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய , மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் ;
கொரோனா தடுப்பு எதிரொலியாக சுகாதாரத்துறைக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே, 2020ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2021ம் ஆண்டு ஜூலை வரையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது.
2021ம் ஆண்டு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் 2021ம் மார்ச் வரை மத்திய அரசுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in