1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்! பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

1

பெண்கள் வாழ்க்கையில் சொந்தமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு 01 ஆகஸ்ட் 2014 அன்று தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அற்புத திட்டமே இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தை சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என்றும் அழைப்பர். தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் அரசு தரப்பிலிருந்து இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் நோக்கம் என்ன?
விதவை பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்களின் மனைவிகள், சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயத்தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சொந்த சம்பாதியத்தின் மூலம் குடும்ப பொறுப்புகளை கையாளுவதற்கும், சமூதாயத்தில் அவர்களுக்கான மதிப்பை மேம்படுத்துவதற்கும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கிறது.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்னென்ன?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராகவும், தையல் தெரிந்துவராகவும் இருக்க வேண்டியதுய் மிக அவசியம். குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல், திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம். அதேபோல், விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசு வேலைகளில் இருக்கக்கூடாது.

இலவச தையல் மெஷின் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இலவச தையல் மெஷின் திட்டத்தின் மூலம் பயன் பெற விண்ணப்பத்தாரர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி வரம்புகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அத்துடன், பின்வரும் பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • விதவை பெண்கள்
  • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
  • ஆதரவற்ற பெண்கள்
  • மாற்றுத்திறனாளி பெண்கள்
  • மாற்றுத்திறனாளி ஆண்களின் மனைவிகள்
  • சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்
  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த பெண்கள்
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் நன்மைகள்
இத்திட்டத்தின் மூலம் தகுதியுடையோருக்கு தையல் இயந்திரம் மற்றும் ஊசிகள், பாபின்கள், நூல்கள், கால் மிதி போன்ற தையல் இயந்திரத்திற்கு அவசியமாக இருக்கும் பாகங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் இருந்துக் கொண்டே துணி தைக்கும் தொழில் செய்யலாம். குடும்ப பொறுப்பால் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்ல முடியாத பெண்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கும்.

கணவனை இழந்து ஒட்டுமொத்த குடும்ப சுமையை கையில் எடுக்கும் ஏழைப் பெண்களுக்கு தினந்தோறும் ஏற்படும் நிதிப் பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தங்களது திறமை மூலம் சொந்த காலில் நிற்பதற்கான தன்நம்பிக்கையை பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும்.
  • குடும்ப அட்டை நகல்
  • ஆதார் கார்டு
  • இருப்பிடச் சான்று
  • சாதிச் சான்றிதல்
  • வயதுச் சான்றிதழ்
  • வருமானச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் ஐடி
  • 6 மாதம் தையல் பயிற்சி முடித்த சான்று
  • விதவைச் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் அல்லது ஆதரவற்றோர் சான்றிதழ் அல்லது மாற்றுத்திறனாளி சான்றிதழ்

தமிழ்நாடு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரத்தை பெற பொது சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். அதற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று திட்டம் குறித்து கூறினால் அவர்கள் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிப்பார்கள். பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டியது இருக்கும்.

அனைத்து செயல்முறையும் முடிந்தது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். பிறகு, திட்டத்துக்கு விண்ணப்பித்ததின் அடையாளமாக ஒப்புகை சீட்டு ஒன்றும் வழங்கப்படும். அதையும், விண்ணப்பம் மற்றும் பதிவேற்றிய ஆவணங்களின் நகல்களையும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் உங்களது விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு மிஷின் வழங்கப்படும்.இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் நோக்கம் என்ன?
விதவை பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்களின் மனைவிகள், சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயத்தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சொந்த சம்பாதியத்தின் மூலம் குடும்ப பொறுப்புகளை கையாளுவதற்கும், சமூதாயத்தில் அவர்களுக்கான மதிப்பை மேம்படுத்துவதற்கும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கிறது.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கான தகுதி வரம்புகள் என்னென்ன?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராகவும், தையல் தெரிந்துவராகவும் இருக்க வேண்டியதுய் மிக அவசியம். குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல், திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம். அதேபோல், விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசு வேலைகளில் இருக்கக்கூடாது.

இலவச தையல் மெஷின் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இலவச தையல் மெஷின் திட்டத்தின் மூலம் பயன் பெற விண்ணப்பத்தாரர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி வரம்புகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அத்துடன், பின்வரும் பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • விதவை பெண்கள்
  • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
  • ஆதரவற்ற பெண்கள்
  • மாற்றுத்திறனாளி பெண்கள்
  • மாற்றுத்திறனாளி ஆண்களின் மனைவிகள்
  • சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்
  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த பெண்கள்
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் நன்மைகள்
இத்திட்டத்தின் மூலம் தகுதியுடையோருக்கு தையல் இயந்திரம் மற்றும் ஊசிகள், பாபின்கள், நூல்கள், கால் மிதி போன்ற தையல் இயந்திரத்திற்கு அவசியமாக இருக்கும் பாகங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் இருந்துக் கொண்டே துணி தைக்கும் தொழில் செய்யலாம். குடும்ப பொறுப்பால் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்ல முடியாத பெண்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கும்.

கணவனை இழந்து ஒட்டுமொத்த குடும்ப சுமையை கையில் எடுக்கும் ஏழைப் பெண்களுக்கு தினந்தோறும் ஏற்படும் நிதிப் பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தங்களது திறமை மூலம் சொந்த காலில் நிற்பதற்கான தன்நம்பிக்கையை பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும்.
  • குடும்ப அட்டை நகல்
  • ஆதார் கார்டு
  • இருப்பிடச் சான்று
  • சாதிச் சான்றிதல்
  • வயதுச் சான்றிதழ்
  • வருமானச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் ஐடி
  • 6 மாதம் தையல் பயிற்சி முடித்த சான்று
  • விதவைச் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் அல்லது ஆதரவற்றோர் சான்றிதழ் அல்லது மாற்றுத்திறனாளி சான்றிதழ்

தமிழ்நாடு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரத்தை பெற பொது சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். அதற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று திட்டம் குறித்து கூறினால் அவர்கள் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிப்பார்கள். பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டியது இருக்கும்.

அனைத்து செயல்முறையும் முடிந்தது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். பிறகு, திட்டத்துக்கு விண்ணப்பித்ததின் அடையாளமாக ஒப்புகை சீட்டு ஒன்றும் வழங்கப்படும். அதையும், விண்ணப்பம் மற்றும் பதிவேற்றிய ஆவணங்களின் நகல்களையும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் உங்களது விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு மிஷின் வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like