அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..! இனி மருத்துவ படிப்பிற்கு 10 % இட ஒதுக்கீடு..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5% இல் இருந்து 10% ஆக உயர்த்துவது குறித்து சட்ட விதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்றும் தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமிரல் என விமர்சித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து பத்து சதவீதம் வரை உயர்த்துவது குறித்து சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், அவசரகதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஓதுக்கீட்டை உயர்த்தும் பட்சத்தில் சிலர் நீதிமன்றத்தை அணுகி பல்வேறு பிரச்சனைகளை சிக்கல்களை எழுப்பக்கூடும்.
எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது , சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்