பெண்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி..! ஈரமாவு அரைக்கும் வணிக இயந்திரங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்..!

கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ( பிறப்பிடச் சான்று). வயது வரம்பு வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று மர்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும் ) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாச்சியிரிடமிருந்து பெறுதல் வேண்டும்.
எந்தெந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உங்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் தேவையான ஆவணங்களை அரசிடமிருந்து பெற்று உடனடியாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க தேவையானசான்றுகள்:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்டசான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். (பிறப்பிடச்சான்று) வயது வரம்பு -25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.
* பிறந்த தேதிக்கான சான்று
* திட்டத்தில் முன்னுரிமை பெறவேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்பிக்க வேண்டும்.
* ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்)
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்கள் 14.07.2025-ற்குள், மாவட்ட சமூகநல அலுவலகம் அல்லது உங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் மாவட்டத்தின் சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.