சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் உங்க ஏரியாவில் 50 குடிநீர் ஏடிஎம்கள்!

"பொது மக்கள் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துப் பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்கள் நிறுவப்படும். 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் தண்ணீர் கிடைக்கும். மக்கள் தங்கள் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம்.
கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் முதல் கட்டமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் 50 குடிநீர் ஏடிஎம்களை தொடங்கி வைக்கிறார்.
திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரமானது பல்வேறு இடங்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடை காலத்தில் பலரும் தாகம் தீர்க்க இது உதவும் என்று நம்பப்படுகிறது.