குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! விரைவில் மலைவாழ் மக்களுக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம்..!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், மலைவாழ் மக்களின் வசதிக்காக இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்ப்படும் என கூறியிருந்த நிலையில், அந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் சென்றுவர மிகவும் சிரமமாக இருப்பதால் மலைவாழ் பகுதிகளுக்கு இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி, நவம்பர் 8ம் தேதி ஜவ்வாது மலையில் இருந்து தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றார்.
பின்னர் இந்த திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்றும் கூறினார்.