1. Home
  2. தமிழ்நாடு

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! இனி எப்போதும் தட்டுப்பாடு இருக்காது..!

1

தமிழகத்தில் சில மாதங்களாகவே அரிசியின் விலை பல அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அத்தியாவசிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும், மிக்ஸாம் புயல், பருவமழை தவறியது போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவான காரணத்தினாலும் கடந்த மூன்று மாத காலத்திற்கு அரிசியின் விலை உயர்ந்து காணப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன்படி சென்னையை பொறுத்தவரை கிலோ ரூபாய் 60க்கு விற்ற புழுங்கல் அரிசி ரூபாய் 68 ஆக உயர்ந்தது. வேகவைத்த அரிசி ரூபாய் 70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூபாய் 120க்கும், பழுப்பு அரிசி ரூபாய் 39 க்கு விற்பனை ஆகிறது.ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது.

இந்நிலையில், குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 

அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாம்.. விலையும் குறைந்து தொடங்கியுள்ளதாம்..அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.

 அரிசி விலை உயர்ந்த நாட்களில் தமிழக ரேசன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏதும் வராது என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி இதுவரை எந்த ஒரு அரிசி தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரிசி விலை குறைந்துள்ளதால் ரேசனில், இதற்கான தட்டுப்பாடு எப்போதுமே வராது என நம்பப்படுகிறது. அந்த வகையில் ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like