1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்ககளுக்கு குட் நியூஸ்..! பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி - தமிழக அரசு..!

1

ரேசன் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு பருப்பு, பாமாயில்-ன் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி அந்த இரண்டு பொருட்களும் அரை மாதம் முடிந்தும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதன் எதிரொலியால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," சேரனில் மே மாதத்தில் விநியோகிப்பதற்காக 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.418.55 கோடி மதிப்பீட்டில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும். இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like