ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! வரும் 5-ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேசன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.