ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! பறந்தது அதிரடி உத்தரவு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ba8f8953d60dea1cffc868c34b9f28b0.webp?width=836&height=470&resizemode=4)
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், நேரத்திற்கு முன் ரேஷன் கடைகளை பணியாளர்கள் மூடிவிட்டு செல்கின்றனர் என்றும் மதிய இடைவேளையில் சரியான நேரத்தில் திறப்பது இல்லை என்பது தான்
இந்நிலையில் பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுருந்தது.
இருப்பினும், சில நியாயவிலைக் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் உள்ளனர் . மக்களிடம் இருந்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல்படுத்த உள்ளது
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும்.மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.