குட் நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பேசியதாவது,ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், அதில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக தகுதிகள் இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.அதாவது, ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து, உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது முறையாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதே என எண்ணாமல், ஜூன் 4ஆம் தேதி நடக்கும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களின் விண்ணப்பம் முன்பு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். யாரேனும் உங்களின் தகுதிகள் குறித்து தவறான தகவல் கொடுத்திருக்கலாம். அதனால் கள ஆய்வில் உங்களின் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
எனவே இம்முறை விண்ணப்பிக்கும்போது சரியான தகவல்கள் மற்றும் சான்று ஆவணங்களை இணைத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.