குட் நியூஸ்..! மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்..!

விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுாரில், கனவு இல்ல திட்ட பணிகளுக்கு உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று பேசியதாவது:
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
பழமையான தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கும், முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் கிடையாது.
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும், ஒருசிலர் விடுபட்டிருக்கின்றனர். அப்படி உள்ளவர்களுக்கு முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார். ஜூன் 4ம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கின்றனர். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.