1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பக்கவாதம், மாரடைப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு..!

1

சீன விஞ்ஞானிகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தடுக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

உலகளவில் இதய நோய் அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இதய நோயால் இறக்கிறார். இதனால்தான் பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தடுக்க சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய தடுப்பூசி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது வெற்றிகரமாக இருந்தால், இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளைக் குறைக்க முடியும்.

பக்கவாதம், இரத்த உறைவு மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் தமனிகளில் பிளேக் படிவதைத் தடுக்க சீன விஞ்ஞானிகள் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த "காக்டெய்ல்" நானோ தடுப்பூசியின் சோதனை எலிகள் மீது நடத்தப்பட்டது.

இந்த நானோ தடுப்பூசியை நான்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு  இதய நோய்களைத் தடுப்பதில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like