குட் நியூஸ்..! சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயில் சேவை.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு ரயில் சேவை தொடங்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய ரயில்வே துறை, ரயில் சேவை வழங்க முடிவு செய்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகத் கி கோதிக்கு விரைவு ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் காணொளி வாயிலாகவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் ரயில் சேவையை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சருக்கு தமிழ்நாடு ராஜ்தானி அசோசியேசன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.