1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நெல்லை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு..!

1

நெல்லையில் இருந்து சென்னைக்கு தற்போது வியாழன் தோறும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழன் தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். 

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக் கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் சனிக் கிழமை நெல்லைக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில்களின் சேவைகள் இருமார்க்கத்திலும் நேற்று முன்தினத்தோடு நிறைவு பெற்றன. 

இந்நிலையில் ஜூன் மாதத்திலும் இந்த ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து வரும் 6-ம் தேதி வியாழன் முதல் 27-ம் தேதி வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 7-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை 4 சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. முன்பு கேரள மார்க்கமாக இயங்கிய இந்த ரயில், தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது. 

அதன்படி நாகர்கோவிலில் இருந்து வரும் 9-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு திங்கள் கிழமை காலை 11.15 மணிக்கு போய் சேரும். 

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10-ம் தேதி  மற்றும் 24-ம் தேதிகளில் திங்கள் கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் செவ்வாய்கிழமை காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். நெல்லை வழியாக இரு சிறப்பு ரயில்கள் இம்மாதத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like