1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ரூ.1000 உரிமைத்தொகை பெறாதவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்..!

1

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு செப்.14 ஆம் தேதியில் இருந்தே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை காட்டிலும் ஒரு நாள் முன்பாகவே ரூ.1000 வரவு செய்யப்பட்டதால் குடும்ப தலைவிகள் குதூகலத்தில் இருந்தனர். இதனிடையே, ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கு மறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்று முதல் மீண்டும் நிராகரிப்பு செய்யப்பட்ட குடும்ப தலைவிகள் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் பெறப்பட்ட அடுத்த 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இன்று முதல் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like