1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 8 பழங்குடியின பள்ளிகளைத் தரம் உயர்த்திய தமிழக அரசு..!

1

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு மாணவர்கள் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர்கல்வியை தொடர்ந்து பயின்றிட அரசு தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தனி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்துதல் தொடர்பாக விரிவான கருத்துருவினை அனுப்பியிருந்தார்.

-அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று 11-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணாக்கர் தங்களது இருப்பிடத்திற்கு அருகே மேல்நிலைக் கல்வி பயிலவும், இடைநிற்றலைக் குறைத்து, உயர்கல்வி சேர்க்கை வீதத்தினை அதிகரித்திடும் பொருட்டும்.

அருகாமையில் உள்ள பின்வரும் 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.

63 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் 7 கணினி பயிற்றுநர் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தோற்றுவித்தும் இதற்கான மொத்த செலவினம் ரூ.38,98,61486/- (ரூபாய் முப்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சத்து அறுபத்தோராயிரத்து நானூற்று எண்பத்தாறு) மதிப்பிலான செலவினத்தில், கட்டுமானப் பணிகளை தாட்கோ மூலம் செயல்படுத்தவும். அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கோரியிருந்தார்.

வ.எண்.1 முதல் 7 வரை உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் / வ.எண். 8 - நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல்,

3. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மேலே பத்தி 2ல் அட்டவணையில் உள்ள 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மாவட்டம் மன்னூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like