1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ் ..! நாளை முதல் பொங்கல் பரிசுத் டோக்கன் விநியோகம்!

Q

பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
எனினும், பொங்கல் பரிசு இடம் பெறாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், பா.ம.க., அ.ம.மு.க., பா.ஜ.க. அ.தி.மு.க. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பொங்கல் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, சர்க்கரை அட்டைத்தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரைத் தவிர்த்து, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூபாய் 1,000 ரூபாய் ரொக்கத்துடன், வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.05) அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 பெற நாளை (ஜன.07) முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பைப் பெறலாம். 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like