1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! இன்று முதல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு!

1

நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 9.10 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் அடுத்த நாள் அதிகாலை 05.05 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 8:55 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைகிறது. ஆரம்பத்தில் இருந்து ரயில் திருவனந்தபுரம் மங்களூர் இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நாகர்கோவிலுக்கு நீட்டிக்கப்பட்டது.

தற்போது 21 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.ஆனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 21 பெட்டிகளுக்கு மேல் இருக்கும் ரயில்களை நிறுத்த முடியாது என்பதால், பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜூலை மாதம் முதல் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. ஏனெனில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் வரை நிறுத்தும் வசதி கொண்ட நடைமேடைகள் உள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று முதல் (ஜூலை மூன்றாம் தேதி) இந்த ரயில் கன்னியாகுமரி வரை தற்காலிகமாக நீடிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like