குட் நியூஸ்..! இனி சிக்கிம் டூ கவுகாத்திக்கு வெறும் 5 மணி நேரத்தில் செல்லலாம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e903b44e2d87f3d5412112c5f4d95fac.jpg?width=836&height=470&resizemode=4)
மார்ச் 12, 2024 அன்று 10 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தன. அதன்பிறகு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதிய அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. இந்த சூழலில் சிக்கிமில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அசாம் மாநிலத்தின் கவுகாத்தி வரை செல்கிறது.
இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் வடகிழக்கில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெருமையை பெறும். மேலும் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பயணம் என்பது வெறும் 5 மணி நேரமாக குறைந்து விடும் என்கின்றனர். தற்போது 10 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள் பச்சை பசேலென்று காடுகளும், மலைகளும் ஏராளமாக கொண்டிருக்கின்றன.இவற்றின் வழியே பயணிப்பது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெரிதும் கொண்டாடி மகிழ்வர்.