1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி சென்னை டூ திருவண்ணாமலை மின்சார ரயிலில் போகலாம்..!

1

வேலூரில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிக்கு பணிக்கு வந்து செல்வோரின் வசதிக்காக காலை 6 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு மின்சார ரயில் சென்னைக்கு 9.50 மணிக்கு வரும் சேரும் வகையில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயில் மீண்டும் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.

இந்நிலையில், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. அதேபோல் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9.50க்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 2-ஆம் தேதி முதல் புறப்படும் மின்சார ரயில்,சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பி வேலூர் கண்டோன்மெண்ட் , ஆரணி ரோடு, பெண்ணாத்தூர், கன்னமங்கலம், ஒன்னுபுரம்,சேடராம் பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம்,  போளூர் ஆகிய நகரங்கள் வழியாக திருவண்ணாமலை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Trending News

Latest News

You May Like