குட் நியூஸ்..! கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிமம் கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்..!
கிராமப்பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகள், கட்டணம் செலுத்தி உரிமம் பெறுவது கட்டயாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த சட்டத்தின்படி, நகர்ப்புறம் அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என இரு வகையாக பிரிக்கப்பட்டது. அதேபோல, தொழில்களை உற்பத்தி மற்றும் சேவைகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு உட்பட்ட தொழில்களுக்கு தொழில் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் 250 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை லைசன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
5 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் வரையிலான முதலீடு உள்ள தொழில்களுக்கு 750 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும் லைசன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 48 தொழில்கள் பட்டியலிடப்பட்டன.
இந்நிலையில், கிராமப்புற பஞ்சாயத்துகளில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிமம் கட்டாயம் என்ற செய்தி தவறானது எனவும் தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.