1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழக ரேஷன் அரிசியில் புதிய மாற்றம்..!

1

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அரிசியில் மாவு சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

இவை அரிசியாக மாற்றப்பட்டு 100 கிலோ அரிசிக்கு 1கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும். அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, கடந்த ஆண்டு முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் 2000 டன் என ஆண்டுக்கு 24000 டன் ஊட்டச்சத்து  கலவையை தயாரிக்கும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அரிசியை தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அரிசி சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like