1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நாளை பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு..!

1

மாசி மாதத்தில் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான வருகிற (10.03.2025) திங்கட்கிழமை  அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like