குட் நியூஸ்..! IPL போட்டிகள் ஒரு வார காலத்திற்கு மட்டுமே தள்ளிவைப்பு..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 58 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், தேதி குறிப்பிடாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த சூழலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது என்பதாலும் இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் IPL போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில் நேற்று அப்போட்டி திடீரென கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று காலை IPL போட்டிகள் காலவரையின்றி தொடர் தள்ளிவைக்கப்படுவதாக BCCI அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், புது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
🚨 News 🚨
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.
🚨 News 🚨
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.