1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இணையதள வசதி..!

1

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டமான, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது, கடந்த 2015-ல், துவங்கப்பட்டது.. கிராமப்புற மக்களின் வாழ்க்கை சூழலை அடியோடு மாற்றக்கூடிய, உறுதியான வீடுகளை அவர்களுக்கு கட்டி தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடு கட்டி கொடுப்பது, நிலம் வைத்துள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது என 3 பிரிவுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் தரப்படுகிறது.. இந்த திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் குறைவு. வருமானத்திற்கு ஏற்ப மானியம் மாறுபடும். வீட்டின் அளவுக்கேற்ப இந்த மானிய தொகை வழங்கப்படுகிறது.. கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் தரப்படுகிறது.

வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் வசதிகள் உள்ளன. வீடுகளை வேகமாக கட்டி முடிப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, நேரடி ஆய்வுகள், நிதியை விடுவிப்பது போன்றவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.. மேலும், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்காக ஒதுககப்பட்டுள்ளது. அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு உரிமையானதாகும்.

இப்படிப்பட்ட சூழலில், PMAY எனப்படும் இந்த பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வீடு பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை, இணையதளத்தில் அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த திட்டத்திற்கான அவகாசம் முடிந்த நிலையில், 2ம் கட்டம் 2024ல் துவக்கப்பட்டது. இதில், பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பொதுமக்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்ற தகவல்களை எளிதாக பெறலாம்.

உள்ளாட்சி அமைப்பு அல்லது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு செல்லாமல், ஆன்லைனிலேயே பொதுமக்கள் நேரடியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்... இணையதளத்தில் தங்கள் தகுதி நிலையை அறிந்து, அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களை பதிவேற்றமும் செய்யலாம். தகுதியான விண்ணப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், பொது மக்கள் அலைச்சல் இல்லாமல், எளிதாக வீடு பெற வழி ஏற்படும். https://pmaymis.gov.in/ PMAYMIS2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதள முகவரியில் இந்த வசதியை பெறலாம் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like