குட் நியூஸ்..! பயர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது மத்திய அரசு..!

பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 14 காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி விலை உயர்த்தப்பட்ட பயிர்கள் விபரம்
( விலை உயர்வு ஒரு குவிண்டாலுக்கு)
நைஜர் விதை - ரூ.820
ராகி( கேழ்வரகு) - ரூ.596
பருத்தி - ரூ.589
எள் - ரூ.579
நெல் - ரூ.69
துவரை பருப்பு- ரூ.450
பாசிப்பயிறு - ரூ.86
கடலை எண்ணெய் வித்து- ரூ.480
சூரியகாந்தி எண்ணை விதை - ரூ.441
சோயா பீன்ஸ் -436 உள்ளிட்ட 14 பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: விவசாயிகளுக்காக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 - 11 ஆண்டுகளில், காரீப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 2025 - 26 பருவத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2,07,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.