1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மின்சார ரயில்கள் விரைவில் கிளாம்பாக்கத்தில் இயங்கும்..!

1

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் திறப்பு விழா கண்டது. தற்போது லட்சக்கணக்கான பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு பயணிகள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சுலமபமாக வந்து செல்லும் வகையில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து, நேரடியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் ஆகாய நடைபாதை கட்டப்பட உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து, கிளாம்பாக்கம் செல்வதற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள புறநகர் ரயில் நிலையம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தால் பயணிகள் சிரமம் இன்றி கிளாம்பாக்கம் வந்து முடியும்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது எனவும், இந்தப் பணிகளை தமிழக அரசு முடித்ததும் கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணி தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like