குட் நியூஸ்..! ரூ.25,000 ஊக்கத்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு..!!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிர்வு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், இந்தப் பிரிவு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். அதனைப் போல முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான நிதியை அரசு ஒதுக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின்கீழ் 25 ஆயிரம் ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https//portal.naanmudhalvan.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இருந்த நிலையில் ஜூலை 13 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் அதிகபடியாக 37 வரையும், மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 35 வயது வரையும், பொதுப் பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம்.
மதிப்பீட்டிற்கு தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cms.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பம் கட்டணம் எதுவும் கிடையாது. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான ஹால் டிக்கெட் ஜூலை 3வது வாரம் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும்.